KUWAIT BANS CRYPTOCURRENCY INVESTMENT AND MINING

Kuwait’s financial authority சமீபத்தில் கிரிப்டோகரன்சி
முதலீடுகள், கிரிப்டோகரன்சி பணம் பரிமாற்றம், டிஜிட்டல் mining போன்றவற்றை தடைசெய்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சிகள் தொடர்பான எந்தவொரு சேவையையும் வழங்க வணிகங்களுக்கு
அனுமதி இல்லை Kuwait’s financial authority பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இருப்பினும், இந்த
கட்டுப்பாடு குவைத்தின் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் securities அல்லது financial authority நிர்வகிக்கப்படும் பிற securities மற்றும் financial instruments பொருந்தாது என அறிவித்துள்ளது.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதில்
கவனம் செலுத்தும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான Financial Action Task Force (FATF) வழங்கிய கிரிப்டோ சொத்துக்களுக்கான உலகளாவிய
பரிந்துரைக்கு இணங்குவதே இந்த தடைக்கான காரணமாக
கருதப்படுகிறது.
கிரிப்டோகரன்ஸிகளை முற்றிலும் தடை செய்யுமாறு FATF கட்டாயப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும்
அவசியம். மாறாக, பணமோசடியைத்
தடுக்கவும் அவர்களின் transaction rules க்கு கட்டுபடுவதை உறுதி செய்யவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Transaction rules படி, கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு
மேலான பரிவர்த்தனைகளின் தரவைச் சேகரித்து வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு
செய்வது கிரிப்டோவின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது.
மேலும் சுற்றறிக்கையில், கட்டுப்பாடற்ற மற்றும் அதிக நிலையற்ற
கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து குடிமக்களுக்கு
எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. குவைத் மட்டுமில்லாமல் மேலும் பல நாடுகள்
டிஜிட்டல் சொத்துக்கள் தொடர்பான நிதி இழப்புகள் மற்றும் மோசடிகளில் இருந்து
நுகர்வோரைப் பாதுகாக்க பல எச்சரிக்கைளை கையாளுகின்றனர்.
கிரிப்டோ பரிமாற்றம், முதலீடுகள்
மற்றும் mining
தடை செய்வதற்கான முடிவு, கிரிப்டோகரன்சிகளின் பரவலாக்கப்பட்ட தன்மை, நிதி அமைப்பு
மற்றும் பாதுகாப்பில் அரசாங்கத்தின் எச்சரிக்கையான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.
கிரிப்டோகரன்சி தொழில் வளர்ச்சியடைந்து வருவதால், டிஜிட்டல் சொத்துகளால் வரும் சவால்கள்
மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள பல நாடுகள் ஒழுங்குமுறை கட்டமைப்பை (financial authority) உருவாக்குகின்றன.
குவைத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் இந்த புதிய விதிமுறைகளை
கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு சட்டரீதியான விளைவுகளையும் தவிர்க்க நிதி ஆணையம்
அமைத்துள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். ஒருவர் வசிக்கும் நாட்டில் அல்லது
வேலை செய்யும் நாட்டில் கிரிப்டோகரன்சி விதிமுறைகளைப் பற்றி தொடர்ந்து
தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.